அஞ்சு கரத்தை ஆனை முகத்தை
நெஞ்சில் நிறுத்திவிடு - ஒரு
சஞ்சலமென்பது கொஞ்சமும் இல்லை
வாழ்வில் உயர்ந்துவிடு!

என்னிலும் உன்னிலும் திருமுகம் காட்டி
சிரிக்குது வேழமுகம் - பிடி
மண்ணிலும் கூட பொன்னாய் மிளிரும்
அழகு ஆனைமுகம்!

கண்ணின் மணியாய் கதிரின் ஒளியாய்
உலகை காக்கும் முகம் - எண்ணிலும்
எழுத்திலும் பாட்டிலும் ஏட்டிலும்
சுவையை சேர்க்கும் முகம்!

மந்திர சொல்லுக்கும் தந்திர வில்லுக்கும்
தலைவன் அவன்தானே? - நல்ல
கல்வியும் கலையும் எங்கும் நிறைந்திட
ஆட்சிகள் தருவானே!
-------------------------------------------------------------------------
பாரத அன்னைக்கே வெற்றி
இனிய நற்காலை வணக்கம். -Sasi Krishnasamy

Tamil Quotes by Sasi Krishnasamy : 111865369

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now