எழுந்திருக்கவே மனமில்லாத காலையில் 
சீக்கிரம் வேலைக்கு போகிறேன் என்கிறாய் 
கவிதை மாதிரி . குழப்பமாய் இருக்கிறது 
நீ வேலைக்கு போகத்தான் அவதாரம் எடுத்தாயா?
நீ அடித்து பிடித்து அலுவலகம் செல்லும் நாளில் 
மிச்சம் இருப்பதெல்லாம் காலி வயிறும் உன்னுடைய அதிகாலை கோலமும் ..