அடர்ந்த பனி இந்த இரவை சூழ்ந்திருக்கிறது . பனி இரவு அவனை தூக்கமிழக்க செய்கின்றது. போதுமான கம்பளங்கள் அவனிடத்தில் இல்லை. இரவு முடியும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணலாம் . அவள் ஆனந்தின் அரவணைப்பில் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க கூடும். ஒருவேளை அவளும் இவனை போல தவித்திருப்பாளோ என்றெண்ணினான். மணி 12 தொட்டது. இவன் வீட்டில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். டீ குடித்தால் தேவலை போல இருந்தது. தூங்கிட்டியா என்று மெசேஜ் ஸ்வேதாவிடம் இருந்து வந்தது. இப்போது ரிப்ளை பண்ண வேண்டாம் என்று நினைத்தான். ஜீரோ வாட்ஸ் லைட் போட்டான். டீ தூள் கொஞ்சமே இருந்தது . காலையில் வாங்கிக்கொள்ளலாம் என்றெண்ணியவாறு டீ போட்டான். டீ குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. நீ தூங்குவது போல நடிக்கிறாயா என மறுபடியும் மெசேஜ் வந்தது. இவன் தொடங்கிய நாவலை எப்படி முடிப்பது என யோசித்தான். கொஞ்ச நேரம் எழுதலாம் என முடிவெடுத்தான்.
ஒரு நாளும் உனை மறவேன் - Part 1
அடர்ந்த பனி இந்த இரவை சூழ்ந்திருக்கிறது . பனி இரவு அவனை தூக்கமிழக்க செய்கின்றது. போதுமான கம்பளங்கள் அவனிடத்தில் இல்லை. இரவு முடியும் வரை காத்திருப்பதை வேறு வழியில்லை. ஸ்வேதாவுக்கு ஃபோன் பண்ணலாம் . அவள் ஆனந்தின் அரவணைப்பில் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க கூடும். ஒருவேளை அவளும் இவனை போல தவித்திருப்பாளோ என்றெண்ணினான். மணி 12 தொட்டது. இவன் வீட்டில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். டீ குடித்தால் தேவலை போல இருந்தது. தூங்கிட்டியா என்று மெசேஜ் ஸ்வேதாவிடம் இருந்து வந்தது. இப்போது ரிப்ளை பண்ண வேண்டாம் என்று நினைத்தான். ஜீரோ வாட்ஸ் லைட் போட்டான். டீ தூள் கொஞ்சமே இருந்தது . காலையில் வாங்கிக்கொள்ளலாம் என்றெண்ணியவாறு டீ போட்டான். டீ குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. நீ தூங்குவது போல நடிக்கிறாயா என மறுபடியும் மெசேஜ் வந்தது. இவன் தொடங்கிய நாவலை எப்படி முடிப்பது என யோசித்தான். ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 2
ஆனந்தின் தொலைபேசி அழைப்பை எடுப்பதா வேண்டாமா என யோசித்தான் சிவா. பிறகு அட்டென்ட் செய்து பேசினான். என்னப்பா வேலை கிடைத்து விட்டதாமே வாழ்த்துக்கள் என்றான். நன்றி இனிமேலாவது என் மனைவியை விட்டுவிடுவாய் என நம்புகிறேன் . ஆனந்த் நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க . எல்லாம் எனக்கு தெரியும் உன்னைபற்றி என்றவாறு போனை வைத்தான் ஆனந்த். இரண்டு நாட்கள் கழித்து சேகருக்கு ஃபோன் செய்து விசாரித்தான். என்னாச்சு சேகர் அரவிந்த் ஊரில் இருந்து வந்துவிட்டாரா? ம் வந்துட்டாரு நானே உனக்கு ஃபோன் பண்ணணும்னு நெனைச்சேன் . நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு அவரு ஆபீஸ் ல வந்து பார்க்க சொல்லி இருக்காரு நீயும் வரியா என்றான். சரி வரேன். ஒருவேளை ஆனந்தும் வந்து பிரச்சனை ஆயிடுமோ அப்படின்னு யோசிக்கிறேன். அதெல்லாம் ஒண்ணும் யோசிக்காதப்பா நீ சும்மா வா . சேகரும், சிவாவும் அரவிந்தின் ஆபீஸ் வந்திருந்தார்கள். எதிர்பார்த்த மாதிரி ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 3
மணி 8 ஆனது ரம்யா ஃபோன் செய்யவில்லை. சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள். என்ன நடக்குமோ என்ற பதட்டம் இருந்தாலும் சிவாவின் கையை இறுக பற்றியிருந்தாள் என்ன நடந்தாலும் நீ என்னை கை விட மாட்டேல சிவா . நிச்சயமா இல்லை என்றான்நான் வேணா ஃபோன் பண்ணி பாக்கட்டுமா சேகருக்கு ஃபோன் செய்தான். நானே உன்னை கூப்பிடுறேன் இப்போதான் பாட்டில் ஓபன் பண்ணியிருக்கான் ஆனந்த். ஆனந்த் நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கிறேன் ஸ்வேதா கர்ப்பமாயிருக்கா நான் அப்பாவாகிட்டேன் என்றான் சேகரிடம். சாரி சேகர் உங்க கிட்ட எல்லாம் நான் ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன் . அதெல்லாம் பரவாயில்லப்பா .. சரி வா குடிச்சது போதும் இங்கே பக்கத்துல ஒரு ஹில் டாப் இருக்கு அங்கே போவோம். ரம்யா வரல? அவளுக்கு லேசா தலைவலி அதான் வரல என்றான். சரி அவளை ஒருதடவை பார்த்திட்டு போயிடலாம் என்றான் ஆனந்த். ரம்யா ரூமுக்கு போய் ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 5
வாட்ச்மேன் அவங்க ஊருக்கு போயிருக்காங்களே .. இல்லைனா அவங்களுக்கு ஃபோன் பண்ணி பாருங்களேன் என்றார் . ஃபோன் ரிங் போனது. யாரும் எடுக்கவில்லை. அவங்க ஹஸ்பண்ட் காணாம போனாரு அதனால ரொம்ப மன உளைச்சலோட இருந்தாங்க. உள்ளே லைட் எரிவது போல தெரிந்தது. நாம போலீஸ் கிட்ட போகலாம். அதெல்லாம் வேணாம் சார் அசோசியேஷன் செகரெட்டரி கிட்ட இன்னொரு கீ இருக்கு அதை வைத்து திறந்து பார்ப்போம் என்றார், சுமதி மேடம், மேடம் என கூப்பிட்டு கொண்டே உள்ளே போனார். அங்கே சுமதி தூக்கில் தொங்கியவாறு இருந்தாள் அரவிந்த்துக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான் சிவா. போலீஸ், ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டது .போலீஸ் சிவாவையும், ஸ்வேதாவையும் தனி தனியே விசாரித்தனர் . பிறகு எப்போ கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரணும் என்றனர். அரவிந்த் தடுமாறி போனார், சிவா தான் அவருக்கு ஆறுதல் கூறினான். இதுக்கு மேல நீங்க எதுலேயும் involve ஆகாதீங்க சிவா ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 6
வெளியே யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது அவசரமாக இருவரும் வெளியேறினர். சிவா அந்த டைரியை புரட்டினான் . அது சுமதியின் டைரிதான். என்னை ஆனந்த் ஆனால் அரவிந்த் துரோகம் இழைத்து விட்டான் என்று எழுதப்பட்டு இருந்தது . அரவிந்த் எதுவும் தெரியாதது போல நடிக்கிறானா என சிவா யோசிக்கும் வேளையில் அரவிந்த்திடம் அந்த டைரியை குடுத்தான். அரவிந்த் எதுவும் பேசவில்லை . சரி சிவா நானே இனி இந்த விவகாரத்தை பார்த்து கொள்கிறேன் எனக்காக இவ்ளோ தூரம் ரிஸ்க் எடுத்ததற்கு நன்றி என்றான். சிவா குழம்பியவாறு விடைபெற்றான். சிவா வீட்டுக்கு வந்தபோது ஸ்வேதா கிச்சன் உள்ளே சமைத்து கொண்டிருந்தாள். சிவா நடந்ததை சொன்னான். சரி சிவா போனது போகட்டும் குளித்துவிட்டு வந்து சாப்பிடு என்றாள். சிவா சாப்பிடும் போது அவளுக்கும் ஊட்டி விட்டான். அரவிந்த் என்பவர் மர்ம நபர்களால் கடத்தல் . போலீஸ் காரணம் தெரியாமல் திணறல் என்ற ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 4
விடிந்ததும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். ஸ்வேதா சாரி ஏதோ அசதில அப்படியே தூங்கி போயிட்டேன் . சரி குளிச்சு ரெடி ஆகு நாம கோவிலுக்கு சரி ஸ்வேதா, கடவுள் சந்நிதானத்தில் நாங்க எந்த தப்பும் செய்யல சீக்கிரம் ஸ்வேதாவை கல்யாணம் பன்னிக்கணும் என்று வேண்டிக்கொண்டான் . சேகர் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. சேகர் தலைமறைவாய் இருப்பதை பற்றி கவலையாய் இருந்தது சிவாவுக்கு . ஸ்வேதாவிடமும் சொன்னான்.ஆனந்த் விஷயத்துல என்ன நடந்திருக்கும்னு என்னால கணிக்கவே முடியல.. சிவா நீ அனாவசியமா பயப்படுறே என்றாள் ஸ்வேதா.இரண்டு நாட்கள் கழித்து சேகர் ஃபோன் செய்தான். அவசரம் நீ உடனே புறப்பட்டு ஹோட்டல் ஜெயண்ட்க்கு வந்துடு என்று சொன்னான். சேகர் இளைத்து போயிருந்தான். அவனுடைய கண்கள் தூக்கத்துக்காக ஏங்கி கொண்டிருந்தன. என்ன நடந்துச்சு ஏன் இப்படி இருக்கே உடம்பு சரியில்லையா என கேள்விகளை அடுக்கினான் சிவா. எனக்கு ஒண்ணும் இல்ல. அன்னைக்கு ஆனந்த் ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 7
நான் இப்போ வக்கீலா பிராக்டிஸ் பன்றேன். சுமதியை எனக்கு சின்ன வயசிலேர்ந்தே தெரியும். ரொம்ப தைரியமான பொண்ணு . அவ ஆனந்தை காதலிக்க ஆரம்பிச்சா ஆனா இவளை கை விட்டுவிட்டான். ஆனந்தும், சுமதியும் நெருக்கமா இருந்த வீடியோவை அரவிந்த் கூட ஷேர் பண்ணினான். அரவிந்த் சுமதியை மிரட்டினான் . அந்த வீடியோவை வெச்சு முரளி கூட மிரட்டினான் . சுமதி எதுக்கும் பயப்படலை. அப்போதான் ரம்யா நிச்சயதார்த்ததுல அரவிந்த், ஆனந்த் ரெண்டு பேரையும் சந்திச்சா.சுமதியை மூணாவது மாடிக்கு அழைத்து போய் பேசுனப்போ என்ன நடந்ததுன்னு தெரியல அப்போதான் ஆனந்த் கீழே விழுந்துட்டான்.இப்போ கோமா ல இருக்கான். சுமதி எனக்கு ஃபோன் பண்ணி நடந்ததை சொன்னா. அடுத்த நாளே சுமதி சூசைட் பண்ணிக்கிட்டா. ஆனந்தை தள்ளி விட்டது யாருன்னு கண்டு பிடிக்க போலீசால முடியல. அது யாருன்னு தெரிஞ்சா நாம அடுத்த கட்டத்துக்கு போக முடியும் என்றாள் . நானும் நிறைய ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 8
அதே மாதிரி ஃபோன் கால் மிருணாளினியிடம் இருந்தும் வந்தது. அந்த வரதன் தன்னை எதிர்க்குறவங்க எல்லோரையும் ஒழிச்சு கட்ட முடிவு பண்ணியிருக்கான். இப்போ என்ன பண்ணுறது போலீஸ் ல கம்ப்ளைண்ட் பண்ணுறதை விட வேற வழி இல்லை என்றான் . மிருணாளினி போலீசில் புகார் கொடுத்தும் விட்டாள். போலீஸ் வரதனை எச்சரித்தது . இது நடந்த இரண்டு நாட்களில் திலகவதி வரதானால் கொல்லப்பட்டாள் . வரதன் போலீஸால் அரெஸ்ட் செய்யப்படுகிறான். ஆனந்துக்கும் ஸ்வேதாவுக்கும் விவாகரத்து ஆகிறது . ஸ்வேதா மகிழ்ச்சியின் எல்லையை அடைகிறாள். ஆனால் சிவா பிரச்சினைகளில் மூழ்கி இருப்பதால் அவள் கவலை அடைகிறாள். என்ன சிவா அடுத்து நம்ம கல்யாணம் தானே இப்போ கூட நீ சந்தோஷமா இல்லைனா என்ன அர்த்தம் என்றாள். சிவாவுக்கும் ஸ்வேதாவுக்கும் கல்யாணம் நடக்கிறது. ரம்யாவால் வர முடியாமல் போனாலும் வாழ்த்துக்களை வீடியோ காலில் வந்து தெரிவித்தாள் . சிவாவும்,நிர்மலாவும் சுமதி தூக்கு போட்டு ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 9
ஜான் திகைத்து போனவனாய் அங்கிருந்து ஓடினான். ஸ்வேதாவும் ,சிவாவும் செய்வதறியாது தவித்து போயினர். போலீஸ் விரைந்து வந்து விசாரித்தது. ஜான் அடுத்த 2 மணி நேரத்தில் செய்யப்பட்டான். ஸ்வேதாவும், சிவாவும் ரம்யா குறித்து வேதனை அடைந்தனர். ரம்யாவின் பெற்றோருக்கு தகவல் குடுத்தனர். விமானத்தில் ரம்யாவின் உடல் சென்னைக்கு அனுப்பப் பட்டது. சிவா ஸ்வேதாவுடன் வேதனையுடன் அமெரிக்காவை விட்டு கிளம்பினான். ரம்யாவின் நினைவுகளை என்றும் அவனால் மறக்க முடியாது. ஜான் ஆனந்த் சொல்லித்தான் சிவாவை கொல்ல முயற்சித்ததாக ஒப்புக்கொண்டான். ஆனந்தும் சென்னையில் அரெஸ்ட் செய்யப்பட்டான்.ரம்யா குடுத்த ஹார்ட் டிஸ்கை ஸ்வேதா சிவாவிடம் குடுத்தாள் . அரவிந்த் மனைவியும் ,சேகரும் அதில் உள்ள தகவல்களை பயன்படுத்தி அந்த நெட்வொர்க்கில் உள்ள மீதமுள்ள பிரபல புள்ளிகள் 13 பேரையும் கண்டறிந்தனர். அவர்கள் சம்பந்தமான விவரங்களை சேகரித்தனர். நிர்மலா அதனை நீதிபதிக்கே மெயில் செய்தாள். 13 பேருடைய இல்லங்களிலும், அலுவலகங்களிலும் ரைட் நடந்தது. அதில் அதிகபட்ச ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 10
கமலனை அரெஸ்ட் செய்த செய்கி தீயாய் பரவியது. சிவாவும், ஸ்வேதாவும் சற்றே நிம்மதி அடைந்தனர். ஷிவானி கூட ஆச்சரியம் அடைந்தாள். கமலன் மீது ஜாமீனில் வெளிவர பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரஷர் வந்த போதும் அதை திறமையாக கையாண்டான் எழில்.ஷிவானி சஸ்பென்ஷன் முடிந்து டூட்டியில் ஜாயின் செய்கிறாள். வரதன்அரசியல் பின்னணி பற்றிய டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுகிறாள். யாரும் எதிர்பாராவிதமாக வரதனுக்கு இரண்டு வார பெயில் கிடைக்கிறது. நிர்மலா சற்று கலக்கமடைகிறாள் . எதிர்பார்த்தது போல வரதன் நிர்மலாவை இனிமேலும் நீ இந்த கேசில் தலையிட்டால் அடுத்த பலி நீதான் என எச்சரிக்கிறான். இதற்கிடையில் சேகரை கொன்றது தான் தான் என ஒருவன் போலீசில் ஸரண்டர் ஆகிறான்.இதனால் கமலன் கேஸ் சற்றே வலுவிழக்கிறது. வரதன் பற்றி மேலும் அறிய ஷிவானி திருநெல்வேலி போகிறாள். வரதனின் ரகசிய நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் நெல்லைக்கு போகிறாள். ஒரு ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 11
துப்பாக்கி குண்டு காயமடைந்த எழிலை ஹாஸ்பிடலில் சேர்க்கிறாள் ஷிவானி. எழில் உயிருக்கு ஆபத்து இல்லையெனினும் துடித்து போகிறாள் ஷிவானி. போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து பார்த்து கமலனின் திட்டப்படி எழிலின் பொறுப்புகள் எல்லாம் வேறு ஒரு ஆபீசரிடம் மாற்றப்பட்டது . எழில் வேதனையுடன் ஷிவானியிடம் இதை சொன்னான். நீங்க முதல்ல ஓய்வெடுங்க எழில் உங்க உடம்பு சரியானதும் எல்லாம் பழைய நிலைக்கு வந்து விடும் என்றாள் ஷிவானி. அன்னைக்கு நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க அது என்னன்னு சொல்லலியே என்றான். அதை அப்புறமா சொல்லுகிறேன் என்றாள். சிவா, ஸ்வேதா, நிர்மலா ஆகியோரும் அவனை வந்து பார்த்தனர். வருத்தபடாதீங்க எழில் அந்த கமலன் வேலைதான் இது என்றான் சிவா. மேலும் சில ரகசியமான வேலைகளை கமலன் நீலாங்கரைல இருக்கிற தன்னோட பங்களாவுல செய்யுறதா தகவல் இருக்கு என்றான் சிவா. நான் இப்போ இருக்கிற நிலமைல ஒண்ணும் செய்ய முடியாது ஷிவானி கிட்ட ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 12
என்னாச்சு மணி ஸ்டேஷன் போனியாமே ? ஒன்னுமில்லென்னே ஏதோ பொண்ணு கடத்தல் கேஸ் அப்படின்னு ஷிவானி மிரட்டுறா .. நீ ஏதும் உளறிடலயே அதெல்லாம் ஒன்னுமில்லன்னே... எங்க இருக்க? உடனே ஆபீஸ் வா ஒரு முக்கியமான வேலை இருக்கு என்றான் கமலன். ஆனந்தை பெயிலில் எடுக்க முயன்றும் நடக்காது போனதில் கமலனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஷெரின் என்ற பெண்ணை பற்றி ஏதாவது தெரியுமா என்று நிர்மலாவிடம் அந்த பெண்ணின் போட்டோவை காட்டி கேட்டாள் . இவள் திலகவதி ஃப்ரெண்ட் பேஸ்புக்கில் பார்த்திருக்கிறேன் என்றாள். பேஸ்புக் ஓபன் பண்ணி பார்த்த போது அவள் மீரா என்ற பெண்ணின் கல்யாணத்தில் கடைசியாய் அவள் காணாமல் போன அன்று போட்டோ அப்லோட் செய்திருந்தாள். மீராவுக்கு ஃபோன் செய்து நேரில் போய் பார்த்தாள் . ஷெரின் அவளுடைய பேஸ்புக் ஃப்ரெண்ட் ஒருவரை பார்க்க போவதாய் சொல்லித்தான் போனாள். வேற ஏதாவது தகவல் தெரிந்தால் இந்த நம்பரில் ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 13
ஷெரின் உனக்கு என்னதான் வேணும் என்று எழில் கேட்டான். இப்போதைக்கு இவனை கொல்லாம விடுறேன் அந்த முக்கிய புள்ளிகள் எல்லோருக்கும் தண்டனை வாங்கி குடுப்பீங்களா எழில் நிச்சயமா ஷெரின். சேகர், சுமதி, திலகவதி இவங்க சாவுக்கு காரணமான இவனுக்கும்ஆனந்துக்கும் தண்டனை வாங்கி தாங்க அது போதும் என்றாள். கமலன் உன்னை வார்ன் பண்ணி இத்தோட விடறேன். எனக்கு சட்டத்து மேல நம்பிக்கை இருக்கு என்றாள் ஷெரின். கமலனை அரை மயக்க நிலையில் நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வாசலில் கண்டெடுத்தார்கள் போலீஸ் . கண் விழித்ததும் போலீசார் அவனை அரெஸ்ட் செய்தனர். என்னை எதுக்கு அரெஸ்ட் பண்ணுறீங்க ? அவ சொன்னா உடனே நம்பி விடுவீர்களா . இல்லை உங்களை விசாரிக்கணும்னு மேலிடத்து ஆர்டர். அடுத்து யார் கடத்தபடுவார்களோ என்ற எண்ணம் பரவலாக பேசபட்டு கொண்டிருந்தது. அதற்குள் ஷெரீனை கைது செய்ய உயரதிகாரியிடம் இருந்து பிரஷர் வந்து கொண்டிருந்தது. எழில் திரும்ப சென்னைக்கு ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 14
ஷிவானி தற்காலிக விடுப்பில் செல்லுமாறு உயரதிகாரிகளால் கட்டாயபடுத்தப்பட்டாள் . எழிலும் அப்படி நீ அலட்சியமா இருந்திருக்க கூடாது என்றான். சாரி எழில் அப்போ இருந்த டென்ஷன் ஷெரினோட நிலைல இருந்து யோசிச்சுட்டேன். இப்போ எனக்குத்தான் தலைவலி என்றான் எழில். எனக்கொரு முடிவு சொல்ல மாட்டேங்குறீங்க ? இப்போ அதுதான் ரொம்ப முக்கியம். ஆமா எனக்கு அதுதான் முக்கியம். சரி நான் ஐஜி ஆபீஸ் வர போக வேண்டியிருக்கு. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு என்றான். ஷெரினை பிடிக்க புதிதாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன கூடவே கமலனை பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஷெரினுக்கு அடைக்கலம் கொடுப்பது யார் என்ற கேள்வியே மிஞ்சி நின்றது. அதற்கு விடை ஸ்வேதாவிடம் இருந்தது. ஷெரின் கொஞ்ச நாளைக்கு என் கசின் ஒருத்தன் ஆந்திராவுல இருக்கான் அங்க போய் இரேன் என்றாள் ஸ்வேதா. இங்க போலீஸ் தொந்தரவு அதிகமா இருக்கும். ம் எனக்கு ஓகே தான். என்னால ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 15
இன்னும் நிறைய இருக்கு நீ அவசரப்படாதே கமலன் பையனை 5 வது லான்ச்க்கு கொண்டு வா. நான் உனக்காக வெயிட் பண்ணுறேன் என்றாள். சரி . வது லாஞ்சுக்கு கமலனுடைய பையனை அழைத்து சென்றான் ஆனந்த். மாஸ்க் போட்டிருந்ததால் ஷெரினை அடையாளம் காண முடியவில்லை. மாஸ்க் கழட்டு உன் கூட இன்னொரு லேடி இருக்குரங்க அவங்க யாரு என்றான். அதெல்லாம் உனக்கு அனாவசியம் சிவப்பு மாஸ்க் போட்டிருக்கிறதுதான் நான் .அப்போது திடீரென கமலன் பையன் தப்பித்து ஓட முயன்றான். அவனை விரட்டி சென்றான் ஆனந்த். ஓடி பிடிக்க முடியாமல் துப்பாக்கியால் அந்த பையனுடைய காலில் சுட்டான். அலறி கொண்டு விழுந்தான் கமலன் பையன். போலீஸ் அலர்ட் ஆகி ரவுண்ட் அப் பண்ணியது, ஷிவானி ஆனந்தை மடக்கி பிடித்தாள். ஆனந்த் திகைத்து போனான். அப்போ ஷெரின் எங்கே என்ற கேள்வி அவனை துளைத்து எடுத்தது. கமலன் பையனை அவசரமாக முதலுதவி செய்து ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 16
மறுபடி ஷெரின் முயற்சிக்கவே கோவத்துடன் போனை எடுத்து அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே பின்ன எதுக்கு ஃபோன் பண்ணுறே. இனிமே எனக்கு ஃபோன் பண்ணாதே என்றான் ஷெரின் ஒன்றும் பேசாமல் போனை வைத்தாள் .ஸ்வேதாவும், சிவாவும் அவன் எல்லாவற்றையும் புரிந்து கொள்வான் இப்போதைக்கு அவனை அப்படியே விட்டு விடு என்று சொன்னார்கள். ஷெரின் எல்லாம் என்னால் வந்த வினை. ஆள் தெரியாமல் ஆனந்த் மாதிரி ஒருத்தனை நண்பனாய் நினைத்ததற்கு எத்தனையோ உயிர்களை பலி கொடுத்தாயிற்று என்றாள். அப்போது நிர்மலாவிடம் இருந்து சிவாவுக்கு ஃபோன் வந்தது. எத்தனை நாளைக்குத்தான் ஷெரினுக்கு அடைக்கலம் கொடுப்பீர்கள். அவளை கோர்ட்டில் சரணடைய சொல்லுங்கள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாள். நாங்கள் அவளிடம் பேசிவிட்டு நல்ல முடிவா சொல்லுறோம் என்றான் சிவா. எழிலுக்கும் நாளுக்கு நாள் பிரஷர் அதிகரித்து வந்தது. வேறு வழியில்லாமல் ஷிவானியின் கால் லிஸ்ட் சோதித்தான். அவளது பெயரில் இன்னொரு சிம் நம்பர் இருப்பதை ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 17
யாழினி வீடு சைதாப்பேட்டை அருகே இருந்தது. முன்பே ஃபோன் பண்ணி இருந்ததால் வீட்டில் இருந்தாள். இவர்களை வரவேற்றாள். உதித்தை நன்கு தெரிந்தவள் போல விசாரித்தாள் . உன்னை டாக்டர் ஆக்கி பார்க்கணும் அப்படிங்கிறது கமலனோட கனவா இருந்தது என்றாள். இருவருக்கும் டீ கொடுத்தாள் . எழிலை யாழினிக்கு அறிமுகம் செய்து வைத்தான் உதித். பசங்க ஸ்கூல் போயிருக்காங்க என்றாள். ஹஸ்பண்ட் இறந்ததற்கு பிறகு எல்லாமே கமலன் தான் ஹெல்ப் பண்ணினாரு . இப்போ நாங்க மறுபடி ஆதரவு யாருமில்லாம ஆயிட்டோம் என்றாள். எழில் கமலன் மரணம் குறித்து யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என விசாரித்தான். இன்ஸ்பெக்டர் கிரண் மேலதான் எனக்கு முன்னாடி சந்தேகம் வந்துச்சு. ஆனா அவன் பின்னாடி அந்த சௌமியாதான் இருக்குறாள். கிரண் வெறும் இடைத்தரகர்தான். அவளுக்கும் அவருக்கும் அரசியல் ரீதியா ஒத்து வரலை. ஏதோ அவள் பெரிய பதவிக்கு வருவதை இவர்தான் தடுத்து விட்டதா நினைத்து ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 18
நிர்மலாவிடம் இருந்து ஃபோன் வந்ததும் பரபரப்புடன் அட்டென்ட் செய்தான் எழில். என்ன எழில் சார் கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா இப்போ நிர்மலா உயிரோட இல்லை போனை துண்டித்தது ஒரு ஆண் குரல். வேகமாக நிர்மலா வீட்டுக்கு விரைந்தான் எழில். சுற்றிலும் ஆட்கள் கூடியிருக்க நிர்மலா தம்பி அழுது கொண்டிருந்தான். என்னாச்சு என்றவன் கண்ணில் நிர்மலாவின் சடலம் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்த நிலையில் தென்பட்டது. எழில் சகலமும் ஒடுங்கி நின்றான். அவனுக்கு தான் போகும் திசையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது போல தோன்றியது.செய்தி கேட்டு சிவாவும், உதித்தும் அங்கு வந்தனர். எழில் எந்த சமாதானமும் சொல்ல முடியாமல் தவித்தான். என்ன நடந்தது என விசாரித்த போது இரண்டு பேர் ஜீப்பில் வந்திறங்கி நிர்மலாவை சுட்டதாக நிர்மலாவின் தம்பி நரேஷ் சொன்னான்.விஷயத்தை கேள்விப்பட்ட ஸ்வேதாவும்,ஷெரினும் மிகுந்த வேதனைப்பட்டார்கள். இனி என்ன சார் செய்ய போறோம் ? என்று ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 19
எழில் ஒரு சவாலான சூழ்நிலையில் இருந்தான். சௌமியாவே இவனை போனில் தொடர்பு கொண்டாள். தனக்கும் யாழினியின் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாள். யாழினியை யாரோ நிர்மலா கொலையில் பங்கு பெற செய்திருக்கிறார்கள் என்றான் எழில். சௌமியா அமைதியாய் இருந்தாள். இந்த அமைதிக்கு என்ன அர்த்தம் மேடம். நான் எனக்கு தெரிந்தவற்றை எல்லாம் சொல்லிவிட்டேன் இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள் என்றாள். எழில் கிரணை சந்தித்தான். என்ன ஆனந்த் அமெரிக்கா போகிறானாமே என்றான் . ம் உனக்கும் தெரிந்துவிட்டதா ஆனந்த் உன்னை சந்திக்க விரும்புகிறான் அவசியம் போய் பார் என்றான். நிச்சயம் பார்க்கிறேன் . ஷிவானி நீ அவசியம் அவனை பார்க்க வேண்டுமா என்றாள். வேறு வழியில்லை. என்னதான் சொல்கிறான் என்று பார்ப்போமே. ஆனந்த் சற்றே இளைத்தவனாக இருந்தான். இவனை பார்த்ததும் மகிழ்வுடன் சிரித்தான். என் மேல் உள்ள எல்லா கேசும் நீயும் உன் மனைவியும் போட்டவைதான் என்றான். ஆனா ...Read More
ஒரு நாளும் உனை மறவேன் - Part 20
நரேஷ் குமாரை எப்படியாவது பழி வாங்கும் உணர்வோடு இருந்தான். ஆனால் அப்போதைக்கு அவனால் என்ன செய்ய முடியும் என தீர்மானிக்க கூடிய இடத்தில் அவன் இல்லை. கொலை சம்பந்தமாக யாராவது தவறாக வழி நடத்தினால் உடனே அவர்களை பின் தொடருகிற பக்குவத்துக்கு வந்திருந்தான். ஷிவானி அதை எப்படியோ அறிந்திருந்தாள். நரேஷ் எதையாவது ஏடாகூடமாக செய்து வைக்குமுன் அவனை அதில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே ஷிவானியின் நோக்கமாக இருந்தது. இதற்கிடையில் உதித் அவ்வப்போது தனியாக ஷெரினை சிறைக்கு சென்று சந்தித்து வந்தான். ஷெரின் அவனை பக்குவப்படுத்தினாள் . கிரண் நரேஷை கடத்த திட்டமிட காரணமும் அதுதான். அவன் ஒரு எளிய இலக்காக இருந்தான். கிரண் அவ்வப்போது நரேஷ் உடன் பேசி வந்தான். அவன் குமாரை கொள்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக போலியான வாக்குறுதிகளை நரேஷ் மனதில் பதிய வைத்தான். குமாரை எழில் விசாரிக்க தொடங்கினான். குமார் பிடி கொடுக்காமல் ...Read More