அனைத்து ஒளிகளுக்கும் தலைவியான ஒளிர்மீண் , ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை ஆகாய கங்கையில் உள்ள அனைத்து கிரகங்களிலும் உள்ள உயிரினங்களின் கண்களுக்கு ஒரு பெரும் நட்சத்திரம் போல் காட்சி அளிக்கும்.
நிசிருளி, பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து கருப்புதுவளையின் தலைவி இறைவனிடத்தில் ஒளிர்மீண் தேவியின் உடைய இடம் வேண்டும் என்று பிராத்தனை செய்தாள். ஆனால் இறைவனோ ஒளியின் தலைவி ஒளிர்மீண் இருளின் தலைவி நிசிருளி என்று கூறிவிட்டு மறைந்தார். அதனால் கோபமடைந்த நிசிருளி தன்னிடம் உள்ள இருள் சக்தியை வைத்து கால கிரகத்தில் உள்ள தீய சக்திகளை எழுப்பினாள்.
ஒளி அதிகரிக்கும் இடங்களில் இருள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்கு தீய சக்திகளின் உதவியோடு இறைவனிடமே போர் எடுத்து சென்றாள். இறைவனுக்காக பஞ்ச சக்திகள் நிசிருளியை எதிர்த்தார்கள். ஆனால் இருள் தேவியினுடைய சக்தி தீயவர்களோடு இணைந்ததால் பஞ்ச சக்திகள் தோற்று போகும் நிலையில் இருந்தார்கள்.
என்னுடைய இடம் கிடைக்காததால் இறைவனிடமே போர் எடுத்த நிசிருளி மீது கோபம் அடைந்த ஒளிர்மீண் நிசிருளியை புவியில் அடைத்து வைத்தார். பஞ்ச சக்திகள் ஒளி தேவதைக்கு நன்றி செலுத்தும் போது நிசிருளியின் குரல் பரபாசத்தில் பிரபஞ்சத்தில் அனைத்து இடத்திலும் ஒலித்தது
“இருள் இருக்கும் இடத்தில் இருப்பாள் நிசிருளி
அனைத்து சக்திகளும் எனக்கே சொந்தம்
அதை அடையவும் உன்னை தோற்கவும் மீண்டும் வருவேன்”
இதை கேட்ட ஒளிர்மீண் இறைவனிடம் உதவி கேட்டாள் . ஆனால் அவர்
“இருளை போக்க சிறு சுடர் மட்டும் போதும்.
அவளுடைய பலவீனம் நீயாக இருப்பின், ஏன் என்னிடம் உதவி கேட்கிறாய்?”
என்று கூறி விட்டு மறைந்தார்.
--------------------------------------------------
நிலவில்லா இரவு, நிலவு இல்லை என்றாலும் அங்கு வெளிச்சத்திற்கு குறைவில்லை. அனைவரும் புது வருடம் கொண்டாட்டத்தில் இனிப்புகளை பகிர்ந்து வாழ்த்துக்கள் கூறி இன்பத்திற்கு எல்லை இல்லை என்பது போல் வர இருக்கும் வருடத்தை வரவேற்க அனைவரும் காத்திருந்தார்கள்.
இன்பம் ஒரு பக்கம் ஒளி கோலமாக இருந்தாலும் அவ்விடத்தின் மறு முனையில் ஒரு இளம் பெண் அவள் கைகளில் ஒரு துணி மூட்டையை வைத்து கொண்டு எதற்கோ பயந்து ஓடி கொண்டு இருந்தாள். அவள் விழா நடக்கும் இடத்தை நெருங்கி வந்தாள். விழாவில் உள்ளவர்கள் 10,9,8……3,2,1 (வன்) என்று அனைவரும் மகிழ்ச்சியில் உரைக்க ‘ஹாப்பி நியூ இயர்’ (Happy New Year) என்று பலமாக கத்தினார்கள். ஆனால் அவர்கள் வாழ்த்தை கூறிய மறு கணம் அங்கு இருந்த மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது.
அனைவரும் திகைப்பில் ஒரு நிமிடம் அமைதி அவ்விடத்தில் நிறுவப்பட்டது. இருள் சூழ்ந்த அந்த இடத்தில் ஒரு ஒளி மேலே எழும்பி பலத்த சத்தத்தோடு பூக்களை போல் விரிந்தது. அதை தொடர்ந்து அவ்விடத்தில் மின்விளக்கு ஒளி இல்லாமல் பூக்கள் போல் வானில் சத்தோடு விரியும் வெடிகளின் ஒளி அவ்விடத்தை நிரப்பியது.
துணி மூட்டையை வைத்து இருந்த அந்த இளம் பெண் கூட்டத்தில் ஒருவராக சேர்ந்து கொண்டு மக்களோடு மக்களாக மறைந்தாள். அங்கு இருந்த வெடியின் சத்தமும் மக்களுடைய குரலொலியும் கேட்கும் இடத்தில் ஒரு கருநிழல் வந்தது. கருமைக்கு நிறம் கருப்பு என்றாலும் இது கருமையை விட கருமை கொண்ட நிறம் உள்ள நிழல்.
அந்த நிழல் நேராக அந்த இளம் பெண் இருக்கும் இடத்துக்கு போய் தன் கருமை கொண்ட கைகளை எழுப்பி அப்பெண்ணின் கழுத்தை பிடித்து நெருக்கியது. அங்கு உதவிக்காக அவள் மூச்சித்தினரில் கதறுவது எவர் காதுகளும் கேட்கவில்லை எந்த விழிகளும் பார்க்க வில்லை.
அவளுடைய உயிர் போகும் தருவாயில் கூட அவள் கைகளில் இருந்த அந்த துணி மூட்டையை அவள் கீழே போடவில்லை. அவள் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்த கைகள் அவளை விட்டது. மயக்க நிலையில் கீழே விழ போகும் வேளையில் அவள் கைகளில் உள்ள அந்த துணி மூட்டையை அந்த நிழல் எடுத்து கொண்டது. அந்த மூட்டையை வேறு ஒருவர் கைகளுக்கு சென்றவுடனே, அதில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.
விழாவில் இருந்த ஒரு குடும்பம் வானவேடிக்கைகள் பார்த்து கொண்டு இருக்காமல் வீட்டிற்கு செல்ல இருந்தார்கள். அந்த குடும்பத்தில் இருந்து ஒரு நபர் அவர்களுடைய மகிழுந்து எடுத்து வர சென்றான். தன் கணவன் வண்டி எடுத்து வரும் வரை காத்துக்கொண்டு இருந்தனர் அந்த பெண்ணும் அவள் கைகளை இறுக்கமாக பிடித்து இருந்த ஒரு சிறுமியும். ஆனால் அந்த சிறு பெண்ணுக்கு ஏதோ ஒரு குழப்பத்திலியே இருந்து அவள் அம்மாவிடம் கேட்டாள்
“அம்மா என்னை யாரோ உதவிக்கு கூப்புடுறாங்க …. நா போகணும்” என்று சொல்லிவிட்டு தன் அம்மாவின் கைகளை விட்டுவிட்டு அவள் மீண்டும் விழா நடக்கும் இடத்திற்கு நுழைந்தாள். அவள் பின்னால் அவளுடைய அம்மாவும்
“தாரா, நில்லு மா” என்று கூப்பிட்ட படியே ஓடி வந்தாள் .
சிறு பெண் தாரா நேராக அந்த நிழல் இருக்கும் இடத்திற்கு போய் நின்றாள். அவள் பின்னால் வந்த அவளுடைய அம்மாவும் அங்கு மயக்க நிலையில் இருக்கும் இளம் பெண்ணையும் நிழல் உருவத்தின் கைகளில் ஒரு குழந்தையையும் கண்டு பயத்தால் தாராவை தன்னிடம் இழுத்தாள்.
ஆனால் தாரா அந்த நிழலை நோக்கி செல்ல முற்பட்டாள். அவளுடைய அம்மா அவளை செல்ல விடாமல் தடுத்து பின்னல் நிற்கும் படி சொல்லிவிட்டு, அவளே அந்த நிழலை நோக்கி சென்றாள். அவளுடைய அம்மா அந்த நிழல் முன் போய் நின்று அந்த குழந்தையை வாங்க முற்படுவதற்கு முன்னர் அந்த நிழலினுடைய விரல் அசைவிற்கு தரவின் அம்மா சாம்பலாகினாள்.
அதை பார்த்த தாரா, தாய் எரிந்த இடத்திற்கு சென்று சாம்பலாக இருக்கும் அம்மாவை பார்த்து அழுது கொண்டே கோபத்தோடு அந்த நிழலை பார்க்க அந்த நிழல் அந்த சிறு பெண்ணினுடைய கருநிற விழியில் இருந்த பிரகாசம் தாங்க முடியாமல் கைகளில் இருந்த குழந்தையை கீழே போட்டு அவ்விடத்தை விட்டு மறைத்தது.
அந்த பிரகாச ஒளி அந்த நிழல் மட்டும் அவ்விடத்தைவிட்டு மறைக்க செய்யாமல் அவ்விழாவில் இருந்த அனைவரும் மிக பிரகாசமான ஒளியை நோக்கி சென்றார்கள். அங்கு ஒரு சிறு பெண் நின்று அழுது கொண்டே இருப்பதும் ஒரு இளம் பெண் மயக்க நிலையில் இருப்பதும் ஒரு குழந்தையின் அழுகுரலும் சேர்த்து கேட்பதும் பார்த்த அனைவரும் என்ன நடந்தது என்று தெரியாமல் தனக்குள்ளேயே அனைவரும் பேசி கொண்டு இருந்தன.
இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தாரா அவளுடைய அம்மாவின் இழப்புக்கு அழுது கொண்டு இருந்து மயக்க நிலைக்கு தள்ளப்பட்டு கண்கள் இருண்டு அப்படியே கீழே விழும் தருவாயில் “தாரா” என்று ஒரு குரல் வந்த திசையை நோக்கிய கண்கள் தன் தந்தையின் முகத்தை பார்த்து கொண்டே இரு இமைகள் மூடி கீழே விழுந்தாள்.
ஒளி அதிகரிக்கும்