எங்க வீட்டு வாண்டு - 2

தலைப்பு: எங்க வீட்டு வாண்டு பண்ணின அட்டகாசம் இருக்கே. அம்மாடியோவ்!பாகம் இரண்டு: ஸ்கூல் போறதுக்குள்ள ஒரு மகாபாரதப் போரே நடக்கும்!காலைல ஆறு மணிக்கு கோதுமை மாவுல கேக் செஞ்சு, என் சட்டையில கைரேகை வச்ச கதையை போன பாகத்துல சொன்னேன்ல? அதுக்கு அப்புறம் தான் நிஜமான சவாலே ஆரம்பிச்சுது.கோதுமை மாவு பூசியிருந்த கயலை அம்மா ஒரு வழியா குளிப்பாட்டி, புது டிரஸ் போட்டு தயார் பண்ணியாச்சு. இப்போ அடுத்த கட்ட நடவடிக்கை — அவளுக்கு டிபன் ஊட்டி, ஸ்கூல் பஸ்ல ஏத்தி விடுறது!கயல் மா, இங்க வா. தோசையும் தக்காளி சட்னியும் இருக்கு, சாப்பிடு" னு அம்மா கூப்பிட்டாங்க.நம்ம கயல் நைசா ஹால்ல இருந்த சோஃபாவுக்கு பின்னாடி போய் ஒளிஞ்சுக்கிட்டா.நான் மெதுவா எட்டிப் பார்த்து, ஏன்டா செல்லம், சோஃபா பின்னாடி என்ன பண்ற? னு கேட்டேன்.அவ ரொம்ப சீரியஸான மூஞ்சியை வச்சுக்கிட்டு, அப்பா. நான் இப்போ ஒரு சிங்கக் குட்டி. சிங்கம்