பிரேமுக்கு நிச்சயதார்த்த விழாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க நேரம் ஒதுக்க வேண்டி இருந்தது .அவள் அனுப்பி இருந்த பத்திரிகை ஆழ்ந்து படித்தான். கதிரேசனையும் சௌமியாவையும் வர சொல்ல வேண்டியதுதான் என நினைத்தான் மற்றபடி அவனுக்கு முக்கியமானவர்கள் அவனுடைய அப்பா அம்மா அவர்கள் நிச்சயம் வரமாட்டார்கள் அம்மா வந்தால் தீபா சந்தோஷப்படுவாள்.அலங்காரம் வீட்டுக்கு செய்ய வேண்டும் நிச்சயதார்த்தம் எளிமையாக வீட்டிலேயே நடைபெறுகிறது .இது அவனுக்கு சந்தோஷத்தை தந்தது. மேலும் தீபா தன்னுடைய நண்பர்கள் உறவினர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழை அனுப்பி இருந்தாள் . ஒரு 200 பேர் வருவார்கள் என எதிர்பார்த்தான் ஆனால் ரஞ்சனியோ 150 பேர் வருவார்கள் என்று சொன்னாள். ஆபீஸில் வேலை பார்ப்பவர்கள் கலந்து கொள்வார்கள் மற்றபடி சுபாவை நேரில் போய் அழைக்க வேண்டும். சௌமியா என்ன நினைப்பாளோ தெரியாது அவள் எப்படியாவது வந்து விட்டால் இவனுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.சௌமியாவுக்கு தீபாவை விட்டு பத்திரிகையை அனுப்ப சொன்னான் . அவள் உடனே