நிழல் தரும் வசந்தம் - 2

  • 5.1k
  • 1.2k

விதி - விதியின் போக்கிலே தான் நாம் அனைவரும் போய்க்கொண்டு இருக்கிறோம். தெரிந்தும் தெரியாமலும் நாம் அதன் கைப்பாவைகள் ஆகிறோம் என்று சொல்லி முடித்தார் ஸ்வாமிகள். விதியின் திட்டமிடலில் இருந்து தப்ப முடியாதா ஸ்வாமி என்று சுபா கேட்டாள் . வழி இருக்கிறது. நம்முடைய சரீரத்தை கட்டுப்படுத்துவதான் மூலம் நம்முடைய ஆசைகள் பேராசைகளாய் மாறுவதை தடுப்பதான் மூலம் ஓரளவுக்கு விதியின் போக்கை தடுக்கலாம் என முடித்தார். ரொம்ப நன்றி ஸ்வாமி என்றாள் சுபா. ஸ்வாமிகள் நல்ல விஷயமா பேசுறார் பிரேம் .. ஆமா அது ஒரு வகையில் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியது தான். நாளைக்கு வீடு பாக்க போகணும் மார்னிங் 10 மணிக்கெல்லாம் வந்துடு என்றாள். நல்லா யோசிச்சுக்க நாளைக்கு நம்ம ரெண்டு பேரையும் யாராவது தப்பா பேச வாய்ப்பிருக்கு என்றான் பிரேம். அதை பத்தி எனக்கு கவலை இல்லை. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. சரி வரேன் என்றான்.