யாயும் யாயும் - 4

  • 171

4. Welcomeமோகன் முகத்தில் ஒரு பெரும் சிரிப்புடன் நடந்து வந்தான். அன்று நடந்ததை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டான். ஒரு வழியாக அவன் மாயாவிடம் பேசி விட்டான். அவனால் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.வீட்டின் கதவைத் தட்டினான். வீட்டிற்கு முன்பு கலைவாணி மனநல மருத்துவர் என்று பொன்னிற பலகையில் கருப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது. அவனது அத்தை கதவைத் திறந்தாள். மஞ்சள் நிற டாப்சும் வெளிறிய நீல நிற ஜீன்ஸ்சும் அணிந்திருந்தாள். அவளுக்கு முப்பத்தெட்டு வயது என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். உறவில் அத்தை என்றாலும் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் அக்கா போலவும் பாசத்தைக் காட்டுவதில் அம்மா போலவும் இருந்தாள்."ஏண்டா இப்படி பல்லைக் காட்டிட்டு வர?" என்று கேட்டாள்."ஒன்னுமில்லையே" என்று சொல்லிவிட்டு அவளைத்தாண்டி வீட்டிற்குள் சென்றான்."ஏய், என்னமோ இருக்கு சொல்லுடா" என்று பின்னால் வந்தபடியே கேட்டாள்."அட ஒண்ணுமில்லை த்தை" என்று சொல்லிவிட்டு வேக வேகமாக தனது அறைக்கு ஓடினான்."டேய். சரி