நெருங்கி வா தேவதையே - Part 40

  • 624
  • 171

இரண்டு வருடங்களுக்கு பிறகு : ஜோவுக்கும் சுகன்யாவுக்கும் கல்யாணம் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தான் ராகவ். ரஷ்மியை கூப்பிட்டு சேதியை சொன்னான். கடைசியில் சுகன்யாவுக்கு ஒரு நல்ல துணை கிடைத்ததே என்றாள் ரஷ்மி. குழந்தை அழுகிறான் பார் என்றாள். அம்மா அங்குதான் இருக்கிறார்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றாள் . குழந்தை ஒன்று பிறந்தது, எப்படியோ ராகவின் பெற்றோரும் ரஷ்மியின் பெற்றோரும் சமாதானம் ஆயினர். யுவன் அழக்கூடாது என்றார் ரஷ்மியின் அப்பா . யுவனுக்கு என்ன வேணும் என்று கொஞ்சினார். ஜோவுடைய கல்யாணத்துக்கு நாம் அவசியம் போக வேண்டும் எல்லாரையும் பார்க்க வேண்டும் என்றாள் ரஷ்மி. பூஜா அருண் பிஸி ஆக இருப்பார்கள் அவர்கள் வருவார்களா என்றான் ராகவ், நிச்சயம் வருவார்கள். பூஜாவும் அருணும் பிரிந்து ஆறு மாதமாகிறது . இருவரும் தனித்தனியே ஆல்பம் தயாரிக்கிறார்கள். சௌமியா இந்த கல்யாணத்துக்கு வருவதாக சொல்லி இருக்கிறாள். கிருஷ்ணன் அவளுக்காகவும் பிரதீபாவுக்காகவும் ஆவலாக காத்திருக்கிறார் . பிரதீபா